பிள்ளாபாளையத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மாயம்

பிள்ளாபாளையத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் வீடு திரும்பவில்லை என மகன் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-06-21 14:33 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், புகளூர் தாலுகா, அஞ்சூர் கிராமம், எல்லகாட்டுதோட்டம் அருகே உள்ள பிள்ளா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி வயது 63. இவர் ஜூன் 18ம் தேதி காலை 9:30 மணி அளவில் வீட்டிலிருந்து ரங்கசாமி கோவில் பஸ் ஸ்டாப் வரை சென்ற சின்னசாமி வீடு திரும்பவில்லை.

வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், தனது தந்தையை காணவில்லை என சின்னசாமியின் மகன் அருண்குமார் வயது 25 என்பவர், தென்னிலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்,இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து, மாயமான சின்னசாமியை தேடி வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.

Tags:    

Similar News