புதிய வகுப்பறை கடிட்டம் - திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்

சிவகிரி நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி திறந்து வைத்தார்.

Update: 2023-12-09 04:52 GMT

புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் எம்எல் ஏ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான கிராமப்புற மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் . மாணவ - மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் பற்றாக்குறை இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியிடம் கூடுதல் வகுப்பறைகள் கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் 70 ஆயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகளை கட்டியிருந்தார். புதிய கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் இன்று திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் , மாணவ மாணவிகள. என ஏராளமனோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News