ரூ.18.57 கோடியில் குடிநீர் திட்ட பணி- பூமி பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ

ரூ.18.57 கோடியில் அம்ருத் திட்டத்தில் குடிநீர் திட்ட பணி- பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2023-11-29 08:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூரில் ரூபாய் 18.57 கோடியில் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி நாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு அம்ருத் 2.0 கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இன்று ரூபாய் 18.57- கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்திற்க்கான பூமி பூஜை எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ சிவகாமசுந்தரி, பூமி பூஜை பணிகள் முடிந்த பிறகு அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி, துணைத்தலைவர் அம்மையப்பன், செயல் அலுவலர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News