பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ

செங்கல்பட்டு மாவட்டம், செம்மஞ்சேரி பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பொதுமக்களுக்கு எம்எல்ஏ பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

Update: 2024-01-13 02:15 GMT
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ
பொங்கல் விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு ரூ. 1,000/- ரொக்கம் மற்றும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்களை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் வழங்கினார். இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளரும்,15 வது மண்டல குழு தலைவர் V.E மதியழகன்,மன்ற உறுப்பினர் A.முருகேசன்,வட்ட செயலாளர் R.நாகராஜ்,மற்றும் K.D.ரவி,உள்ளிட்ட பொது மக்கள்,பயனாளிகள் அனைவரும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News