மருத்துவமுகாமில் கர்ப்பிணிகளுக்கு அறிவுரை வழங்கிய எம்.எல்.ஏ

Update: 2023-11-26 06:06 GMT

தமிழரசி எம்.எல்.ஏ 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு உதவி பெறும் O.V.C.மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பேசுகையில்,  கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு சிறந்த டிப்ஸ் கூறுகிறேன். கணவர் கருப்பாக இருந்தாலும் குழந்தை சிகப்பாக பிறக்க வேண்டுமா ஒரு டிப்ஸ் தருகிறேன். இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஒரு அரை லிட்டர் நெய் உள்ளது, நம் முதல்வர் உங்களுக்கு கொடுத்தது, இந்த நெய்யை வைத்து தோசை ஊத்திக் உங்க கணவருக்கு கொடுக்கக் கூடாது, உங்க குழந்தை சிகப்பா பிறக்க வேண்டும் என்றால் காலையில எந்திரிச்சு வாஷ்ரூம் போயிட்டு தண்ணிய குடிச்சிட்டு நீங்க உலை வைக்கிறதுக்கு தண்ணி கொதிக்க வச்சிருப்பீங்க அப்போ இந்த நெய்யிலிருந்து ஒரு ஸ்பூன் நெய் எடுத்து அந்த சுடுதண்ணி ஆவியில்ல உருக வெச்சுட்டு அதை ஆற வச்சு அந்த ஒரு ஸ்பூன் நெய்யும் ருசிச்சு குடிக்கனும், அதற்கு அப்புறம் கொஞ்சூண்டு வெந்நீர் தண்ணி குடிக்கணும், இப்படி தொடர்ந்து நீங்க செய்துக்கிட்டு வந்திங்கனா நீங்களும் சிவப்பாருவிங்க. உங்க குழந்தையும் சிவப்பா பிறக்கும். என பேசினார்

Tags:    

Similar News