திருச்சியில் மமக அவசர ஆலோசனை கூட்டம்...

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-29 05:40 GMT
மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. 01.04.2024 அன்று மமக பொதுசெயலாளர் அப்துல் சமது, தலைமையில் அமைச்சர்கள், இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், மமக துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப், அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலீம், மற்றும் தமுமுக மமக மாவட்ட, துணை, அணி நிர்வாகிகள், இந்தியா கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் வகையில் திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் "மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி" 28 வது வார்டு தென்னூர் பகுதியில் நடத்துவது என்றும், விரைவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மமக சார்பில் இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து மாபெரும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News