பிரதமராக மோடி பதவி ஏற்பு - பாரதிய ஜனதாவினர் கொண்டாட்டம் 

பாரத பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்று கொண்டதை தொடர்ந்து கன்னியாகுமரியில்,பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2024-06-10 09:03 GMT

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 

பாரத பிரதமராக நரேந்திர  மோடி நேற்று இரவு மூன்றாவது முறையாக பதவியேற்றார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.    கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு பாரதிய ஜனதாவினர்  கொடி ஏற்றினர். பின்னர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.   இது போன்று நாகர்கோவில்  அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணை தலைவர் தேவ்,  மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News