தென்காசி : உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில் நேற்று பறக்கும் படையினர் 50ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-27 07:13 GMT
தென்காசி மாவட்டத்தில் பறக்கும் படையினர் 50ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் நிலையில் மாவட்டத்தின் எல்லை பகுதி உள்ளிட்ட 11 இடங்களில் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகள் மூலமும், பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.50,09,120 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News