கோவில்பட்டியில் பைக் பெட்டியை உடைத்து பணம் திருட்டு : போலீஸ் விசாரணை

கோவில்பட்டியில் பைக் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.1லட்சம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.   

Update: 2024-03-09 16:37 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் மணிகண்டன் (35). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று வங்கியில் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து தனது பைக் பெட்டியில் வைத்திருந்தாராம். பின்னர் அவர் கோவில்பட்டி கடையநல்லூர் ரோட்டில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தவிட்டு, நண்பர் வீட்டிற்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் திரும்பி வந்துள்ளார்.

அப்போது பைக் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.லட்சம் பணம் திருடு போயிருந்தது. இது தொடர்பாக அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News