தொல்காப்பியர் அறக்கட்டளையின் மாதாந்திர கூட்டம்

காப்புக்காடு பகுதியில் தொல்காப்பியர் அறக்கட்டளை நிர்வாகிகளின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-28 15:13 GMT

காப்புக்காடு பகுதியில் தொல்காப்பியர் அறக்கட்டளை நிர்வாகிகளின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.


தொல்காப்பியர் அறக்கட்டளையின் மாதாந்திர கூட்டம் தலைவர் புலவர் சுந்தரராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சுரேஷ் தொல்காப்பியப் பாயிரம் பாடினார். பொருளாளர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் சஜீவ் செயல்பாட்டுரை வழங்கினார். தொல்காப்பியர் பிறந்த தின விழாவின்போது வருகை புரிந்து சிறப்பித்த பத்மநாபபுரம் கோட்டாட்சியர் தமிழ்ச் செல்வி, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கனகலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், சிறப்பு அழைப்பாளர்கள் என எல்லோருக்கும் நன்றி தெரிவித்தும், தொல்காப்பியத்தின் மேன்மையை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல தேவையான வழிமுறைகளை பின்பற்றிடமும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வழக்கறிஞர் புனித தேவகுமார் தொல்காப்பியப் பெருமை குறித்து சிறப்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் சிந்துகுமார், அதங்கோட்டாசான் அறக்கட்டளைத் தலைவர் புலவர் கோவிந்தநாதன், குமரி முத்தமிழ் மன்ற பொருளாளர் முருகன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேஷ் பாபு , அறக்கட்டளை உறுப்பினர்களான ஷஞ்சய் ஷாலஜி மற்றும் பேபி ஆகியோர் கருத்துரை வழங்கினர். பணி நிறை ஆசிரியர் ரெவிந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News