மகள் மாயம் தாய் புகார்

கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-04-07 07:00 GMT

மகள் மாயம்

கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் இந்துமதி, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி இரவு தண்டலை கிராமத்தில் உள்ள அக்கா வேலுலட்சுமியின் வீட்டில் இரவு தங்கினார். மறுநாள் 4ம் தேதி அதிகாலை முதல் இந்துமதியைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இந்துமதியின் தாய், அஞ்சலை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News