மகள் மாயம் – தாய் புகார்

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் மகளைக் காணவில்லை என தாய் காவல்துறையினர் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-04-14 06:16 GMT

இளம்பெண் மாயம் 

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மகள் ரம்யா, 20; தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். நேற்று காலை 8:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News