"அதிவேக டிப்பர் லாரிகளால் வாகன ஓட்டிகள் திக்... திக்"

படப்பை பகுதியில் குவாரிகளிலிருந்து அதிவேகமாக வரும் டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-27 04:55 GMT

டிப்பர் லாரிகள் 

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள படப்பை பஜார் வீதியில், மந்தகதியில் நடக்கும் மேம்பால கட்டுமான பணியால் ஏற்கனவே நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வாலாஜாபாத், உத்திரமேரூர் சுற்றுப்புறத்தில் உள்ள குவாரிகளில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றி வரும் டிப்பர் லாரிகள், அதிவேகத்தில் படப்பை பகுதியை கடந்து செல்கின்றன. மேலும், ஓட்டுனர்கள் ஒருவரையொருவர் முந்திச் செல்ல லாரிகளை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கனரக லாரிகள் மிதமான வேகத்தில் செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Tags:    

Similar News