நகராட்சி குளத்தை தூய்மை செய்யும் பணி

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட செம்மங்குளத்தை தூய்மை செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

Update: 2024-02-19 00:55 GMT

தூய்மை பணி

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்கு உட்பட்டது செம்மங்குளம். இக்குளம் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையை ஒட்டி உள்ளது. குளத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளதுடன் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை அதிகம் அதில் கொட்டப்பட்டு வந்தன. மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதியில் குளங்கள் அழகு படுத்தப்பட்டு குளத்தை சுற்றி நடைபயிற்சி வசதியும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் இந்த குளம் அந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.

செம்மங்குளமே பாழடைந்ததைபோல் காட்சி தந்தது. இக்குளத்தை தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து மயிலாடுதுறை நகராட்சி மற்றும் வனம் தன்னார்வ குழுவினரும் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். மயிலாடுதுறை நகராட்சி மற்றும் வனம் தன்னார்வ அமைப்பு இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News