மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை - போலீசார் விசாரணை
எலக்ட்ரானிக் கடையில் பூட்டை உடைத்து ரூபாய் இரண்டு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்.போலீசார் விசாரணை.
Update: 2024-02-14 08:37 GMT
திண்டுக்கல் கணேஷ் தியேட்டர் அருகில் உள்ள மணியன் கோ என்ற கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூபாய் இரண்டு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இன்று காலை கடையை திறந்த உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.