பாலக்கோடு அருகே சமுதாய கூடத்தில் பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்

பாலக்கோடு அருகே சமுதாய கூடத்தில் பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-28 10:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சி சென்னப்பன் கொட்டாய் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறக்கப்பட்டது.

மண்டபத்திற்க்கு அடிப்படை தேவைகளான சமையல் பாத்திரம், நாற்காலி, கேஸ் அடுப்பு, மணமக்கள் நாற்காலிகள் உள்ளிட்ட . 6லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் திருமன மண்டபத்தில் புகுந்து நாற்காலி, எலக்ட்ரிக் சுவிட்ச், கழிவறை பைப்புகள், ஜன்னல் கண்ணாடி, சுவாமிபடம் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதபடுத்தி சென்றுள்ளனர்.

அவ்வழியாக சென்றவர்கள் மண்டபம் திறந்து கிடப்பதையும் மண்டபத்தில் உள்ள பொருட்கள் சேதமாகி உள்ளதையும் கண்டு மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்க்கு வந்த மாரண்டஅள்ளி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மண்பத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News