வேடமணிந்த நாடக கலைஞர்களுடன் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல்

கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு வேடமணிந்த நாடக கலைஞர்கள் மற்றும் கட்சியினருடன் ஊர்வலமாக சென்றார்.

Update: 2024-03-21 07:47 GMT

கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு வேடமணிந்த நாடக கலைஞர்கள் மற்றும் கட்சியினருடன் ஊர்வலமாக சென்றார்.


கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் அருகே பலத்த போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலையில் இருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக கட்சியினருடன் ஊர்வலமாக சென்றார்.

ஊர்வலத்தின் போது அம்பேத்கர், திருவள்ளுவர், வேலுநாச்சியார் உள்ளிட்ட வேடமணிந்த நாடக கலைஞர்கள் ஊர்வலமாக சென்றார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக பகுதியில் 100 மீட்டர் முன்பாக வேட்பாளர் ஜெகதீசனுடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கள்ளக்குறிச்சி தொகுதியில் முதல் நாளான நேற்று ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News