நாமக்கல் நவோதயா பள்ளி மாணவி முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சாதனை !!!

நாமக்கல் நவோதயா பள்ளி மாணவி முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2024-10-02 11:46 GMT

 நவோதயா பள்ளி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகின்றது. இதில் அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் நமது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15,16,17ஆம் தேதிகளில் நாமக்கல் நல்லிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதில் நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரிப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி, எல். ஜி. பிரபஞ்சனா கால்பந்து போட்டியில் முதல் இடத்தையும், டென்னிஸ் போட்டியில் மூன்றாம் இடத்தையும், பெற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 30.09.2024 காலை பள்ளியில் நடைபெற்ற வழிப்பாட்டுக் கூட்டத்தில் பதக்கம் மற்றும் பாரட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள், சக மாணவ, மாவியர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News