நரிக்குறவர் மக்கள் பட்டா கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

சங்கராபுரம் சமத்துவபுரம் நரிக்குறவர் இன பொதுமக்கள் பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Update: 2024-02-08 05:32 GMT


சங்கராபுரம் சமத்துவபுரம் நரிக்குறவர் இன பொதுமக்கள் பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


சங்கராபுரம் சமத்துவபுரம் நரிக்குறவர் இன பொதுமக்கள் பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இது தொடர்பாக சங்கராபுரம் சமத்துவபுரம் நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் பட்டா வேண்டி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' முகாமில் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை.

தற்போது 1,000 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் எங்கள் மனுவை அரசு நிராகரித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நபர்களுக்கே மீண்டும் பட்டா வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கேட்டால் புதிய நபர்களுக்கு பட்டா வழங்க முடியாது என கூறுகின்றனர்.

தற்போது எங்கள் பகுதியில் இட நெருக்கடியால் ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 4 குடும்பத்தினர் வரை வசித்து வருகிறோம். சிலர் புதியதாக வீடு கட்டி பட்டா இல்லாமலும், குடிசை வீட்டிலும் வசித்து வருகின்றனர். எனவே, நரிக்குறவர் இன மக்களில் பட்டா இல்லாதவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News