வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியில்  நாயக்கர் கால சொம்புகாசு கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியில்  நாயக்கர் கால சொம்பு காசு கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 08:36 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914 தொல்லியல் பொருட்கள் கிடைக்கப் பட்டன இது தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசுக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நாணயம் கி. பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது. இக்காசின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இக் காசில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

Tags:    

Similar News