அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

விருதுநகரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

Update: 2024-05-02 01:50 GMT
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை போக்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.. தமிழகம் முழுவதும் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் கோடை காலத்தில் பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்து வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆமத்தூர், விருதுநகர் போக்குவரத்து பணிமனை, அம்மன் கோவில் திடல், பாண்டியன் நகர் மற்றும் அல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே டி ராஜேந்திர பாலாஜி நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன், ஒன்றிய கழகச் செயலாளர் மச்ச ராஜா அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் குருச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News