ஏசி,டிவியை மோசடியாக விற்பனை செய்த ஊழியருக்கு வலை

போலியாக ஆவணம் தயாரித்து இல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஏசி, டிவி கடன் வழங்கியதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மீது நிறுவனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-10 09:09 GMT

விற்பனையகம்

சேலம், மெய்யனுார் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. அங்கு விற்பனை பிரிவில் பணியாற்றிய பிரவீன் கடனுக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து, பொருட்களை எடுத்துச்சென்று விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விற்பனை வசூல் மேலாளர் பாண்டியன், பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பிரவீன் வழங்கிய ஆவணத்தில் குறிப்பிட்டபடி வாடிக்கையாளர் யாரும் இல்லை என தெரிந்தது. அதை பயன்படுத்தி, 3 'ஏசி', தலா, 2 'டிவி' - உயர் ரக மொபைல் போன் ஆகியவற்றை, மோசடியாக விற்றது தெரிந்தது. இதன் மதிப்பு, 3.77 லட்சம் ரூபாய். இதனால் தலைமறைவான பிரவீனை, போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News