நெல்லையில் நெட்டிசன்கள் அலப்பறை!

பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிப்பதற்கு புகார் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட்டுள்ளது.

Update: 2024-03-21 05:50 GMT

புகார் பெட்டி 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம் தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிப்பதற்கு புகார் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டியை இன்று (மார்ச் 21) அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் நாற்காலியில் வைத்து எடுத்து சென்றனர். இந்த சம்பவம் கரகாட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் உள்பட அனைவரும் சேர்ந்து காரை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியை நினைவு படுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News