நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி

நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2024-03-23 07:09 GMT

கலெக்டர் பிரதீப் குமார்

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்தநேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅ ளவைசெய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்ப மிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https:// eservices.tn.gov.in/என்றஇணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நிலஅளவரால் பதி வேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த தகவலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News