அரசுப்பள்ளியில் புதிய நூலகம் திறப்பு

திருவாரூர் மாவட்டம்,பவித்திரமாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் புதிய நூலகத்தை திருவாரூர் எஸ்பி துவக்கி வைத்தார்.

Update: 2024-02-18 09:53 GMT

நூலகம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக நூலகத்தை எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது எஸ்பி நூலகத்திற்கு தேவையான உபகரணங்கள் ,புத்தகங்களை வழங்கி கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கற்றலின் பயன்கள் குறித்தும் பள்ளி மாணவ மாணவியர்களிடம் சிறப்புரையாற்றினார்.

அப்போது திருவாரூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News