புதிய கல்குவாரி, கிரஷர்களுக்கு அனுமதி வழங்க கூடாது - ஆட்சியரிடம் மனு

Update: 2023-12-12 05:26 GMT

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூர் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மற்றும் தார் பிளாண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கனரக வாகனங்கள் அதிக அளவில் குடியிருப்பு வழியாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களும் குடிநீரும் மாசு அடைந்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் புதிய கல்குவாரி கிரஷர் மற்றும் தார் பிளாண்ட்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து புதிதாக இதுபோன்ற தொழில்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்பாடி ஊராட்சி கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலுடன் டிசம்பர் 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Tags:    

Similar News