ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழல் கூடம் - எம்.எல்.ஏ பூமிபூஜை

Update: 2023-11-07 08:25 GMT
பூமி பூஜை 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழல் கூடம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலையம் எதிரில்உள்ள  பேருந்து நிறுத்தத்தில்  நிழல் கூடம் அமைக்க வேண்டும்  என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வாணியம்பாடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார்  சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் நிழல் கூடம் அமைக்கும் பணியை  பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார் இந்தநிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் டி. சாம்ராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கட்சியினர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News