பிச்சம்பட்டியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட் வகுப்பு திறப்பு

பிச்சம்பட்டியில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட் வகுப்பை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்

Update: 2024-01-02 12:35 GMT

ஸ்மார்ட் வகுப்பை திறந்து வைத்த எம்எல்ஏ

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பிச்சம்பட்டி பகுதியில் செயல்படும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டு, பள்ளியில் நிறுவப்பட்டது.

இன்று இந்த புதிய வகுப்பறையை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேது மணி மகாலிங்கம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News