சேலத்தில் புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள்

சேலம் வரலட்சுமி மகாலில் வரும் 31-ந் தேதி இரவு புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Update: 2023-12-28 04:00 GMT

வரலட்சுமி மஹால் 

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள வரலட்சுமி மகாலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்கு பிராண்டு வேலி மற்றும் ஒ2 ஈவெண்ட்ஸ் சார்பில் மனம் விரும்புதே என்ற தலைப்பில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகி மால்குடி சுபா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், சின்னத்திரை பிரபலமான அசாரின் நகைச்சுவை நிகழ்ச்சியும், ரூபினா, ருபிசினா ஆகியோர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து சேலம் புகழ் அபிபா சுரேஷ் நடன குழு, கேரளா நடனக்கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் தொடர்ந்து 6 மணி நேரம் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்களுக்கு பொங்கல் ஷாப்பிங் கிப்ட் வவுச்சர் வழங்கப்படுகிறது. சேலத்தில் இதுவரை கண்டிராத ஒரு அற்புதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News