சாவு

சிவகிரி அருகே விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு;

Update: 2025-03-26 06:23 GMT
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள வள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (38). விவசாயி. இவரது மனைவி தீபா (29). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ரமேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 15ம் தேதி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீபா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.அன்றைய தினமே ரமேஷ் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News