போலீசார் நடவடிக்கை;

Update: 2025-09-03 02:56 GMT
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 64). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 10 வயது சிறுமி மிட்டாய் வாங்க வந்து உள்ளார். அப்போது முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோரின் புகாரின் பேரில் அர்ச்சுனன் மீது சேலம் டவுன் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Similar News