தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-10-08 12:26 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (08.10.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், இ.கா.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய கூட்டத்தில் காவல் நிலையங்களில் முன்பே புகார் அளித்த 12 பேர் மற்றும் புதிதாக மனு அளிக்க வந்த 71 பேர் என மொத்தம் 83 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் முன்வைத்தனர். மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் அவர்கள், ஒவ்வொரு மனுவையும் உடனடியாக விசாரித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில், காவல் நிலைய விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News