எடப்பாடி அடுத்த தாவாந்தெரு காளியம்மன் கோவில் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது

ஸ்ரீ ஓம் காளி அம்மனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அழகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

Update: 2024-02-22 15:53 GMT

காளியம்மன் கோவில் 

எடப்பாடி அடுத்த தாவாந்தெரு காளியம்மன் கோவில் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில் மாசி மாத பண்டிகையான ஓம் சக்தி காளியம்மன் கோவில் திருவிழா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூமிதித்தும் கார்அழகு, ஆட்டோஅழகு ,எலுமிச்சை அழகு என பல்வேறு அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் வெகு விமர்சையாகவும் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News