பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் உலகம்பட்டி ஸ்ரீ.போகர் சித்த மருத்துவமனை இணைந்து அஞ்சுபுளிபட்டி கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

Update: 2023-12-11 02:10 GMT

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மைலாப்பூர் ஊராட்சி அஞ்சுபுளிபட்டி கிராமத்தில் உலகம்பட்டி ஸ்ரீ.போகர் சித்த மருத்துவமனை மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் இணைந்து அச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீ.பிரசன்னா சரவணன் தலைமையில் அஞ்சுபுளிபட்டி கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு மழை கால நோய்களை தடுக்கும் விதமாகவும் அதிகரித்து வரும் காய்ச்சல் நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அப்பகுதி மக்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை அப்துல்கலாம் சங்கத்தினர் வழங்கினர். இந்நிகழ்வில் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் அன்புச்செல்வன், பொருளாளர் கணேசன், நிர்வாகி சிவக்குமார், உலகம்பட்டி ஸ்ரீ.போகர் சித்த மருத்துவமனை மருத்துவர் கருணாநிதி,டாடா ஏசி சங்கர் மைலாப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா அடைக்கலசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
Tags:    

Similar News