வட மாநில தொழிலாளி பலி

கருரில் கிரசரில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளி, கன்வேயர் பெல்ட் தாக்கி உயிரிழப்பு.

Update: 2024-02-29 15:29 GMT

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் பவன் வயது 45.இவர் கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, குரும்பபட்டியில் செயல்படும் விநாயகா புளுமெட்டல் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி மதியம் 12:15- மணியளவில், வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, கிரஷரில் செயல்படும் கன்வேயர் பெல்ட் எதிர்திசையில் திரும்பி அங்கு பணியில் இருந்த உமேஷ் பகவான் மீது தாக்கி உள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் உமேஷ்பவன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த உமேஷ் பவன் மனைவி மாங்கவி தேவி என்பவர், இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த உமேஷ் பவன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, விநாயகா ப்ளூ மெட்டல் உரிமையாளர் செல்வராஜ் மீதும் மேலாளர் சுந்தர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்,

Tags:    

Similar News