வார்டு பணிகளை முறையாக செய்யவில்லை: உறுப்பினர் குற்றச்சாட்டு

ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் நகர் மன்ற கூடத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடந்தது.

Update: 2024-03-04 14:55 GMT

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

கூட்டத்தில் ஐஜேகே நகர்மன்ற உறுப்பினர் வரதராஜன் எனது வார்டு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மின்மோட்டார் அமைக்கப்படவில்லை. அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை செய்து வெளிநடப்பு.

திமுக அதிமுக கவுன்சலர் இடையே கடும் வாக்குவாத்த்தால் சலசலப்பு ஏற்பட்டு அதிமுக வெளிநடப்பு .

Tags:    

Similar News