தென்காசி :எரிவாயு நுகர்வோர் கூட்ட தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்ட அளவில் காஸ் சிலிண்டர் முகவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நுகர்வோர் பங்கேற்கும் கூட்டம் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-31 06:37 GMT

நுகர்வோர் கூட்டம்

தென்காசி மாவட்ட அளவில் காஸ் சிலிண்டர் முகவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நுகர்வோர் பங்கேற்கும் கூட்டம் 6ம் தேதி மாலை 4 மணிக்கு தென்காசி உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் பங்கேற்க உள்ளார். எரிவாயு நுகர்வோர் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News