பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

ஈத்தாமொழியில் 5 பேரை வெட்டிய வழக்கில் பிரபல ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-18 05:54 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள வடக்கு சூரங்குடி பகுதி சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் சிவன் (21). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு என்பவர் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு கும்பலுடன் வந்த சிவன் ஆட்டோ டிரைவர் பிரபு உட்பட்ட ஐந்து பேரை வெட்டி விட்டு தலைமறைவாகிவிட்டார். 

 இந்த வழக்கில் தனிப்படை போலீசார் சிவனை தேடி வந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட எஸ் பி சுந்தர வதனம்,  கலெக்டர் ஸ்ரீதர்  இடம் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் சிவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து போலீசார் சிவனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News