பொன்னேரியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

பொன்னேரியில் உள்ள தாலுக்கா அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2024-02-20 09:57 GMT


பொன்னேரியில் உள்ள தாலுக்கா அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தாலுக்கா அலுவலக கூட்டரங்கில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது.

பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் முன்னிலை வகித்த இந்த அறிமுக கூட்டத்தில் தேர்தலின் போது வாக்குச்சாவடி பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News