வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு !!

வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-06-03 12:29 GMT

ஆய்வு

மக்களவை பொதுத்தேர்தல் வாக்குகள் நாளை திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 3) வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணி குறித்து தேர்தல் பொது பார்வையாளர் சோனாலி பென்ஷோ வயங்கங்கர், தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி, ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News