சாலை விபத்தில் மூதாட்டி பலி

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலியானார்.

Update: 2023-12-25 09:22 GMT

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலியானார். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி பரமேஸ்வரி (வயது 59). இவர் திண்டிவனத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி, சலவாதி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை திண்டிவனத்தில் இருந்து சலவாதி நோக்கி பஸ்சில் புறப்பட்டார். பின்னர், சலவாதி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பரமேஸ்வரி மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது, இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோசனை போலீசார் பரமேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News