மூதாட்டியின் உடல் உறுப்பு தானம், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

சேந்தமங்கலம் மூளைச்சாவடைந்த மூதாட்டியின் உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

Update: 2023-12-14 13:08 GMT

சேந்தமங்கலம் மூளைச்சாவடைந்த மூதாட்டியின் உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி, பள்ளிப்பட்டி பஞ்., பகுதியை சேர்ந்த ஜோதிடர் நாராயணன். 78, மனைவி சுப்புலட்சுமி, 71. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் காலமானார். இந்நிலையில் சுப்புலட்சுமி அவரது மகன் அருள் வேங்கடத்துடன் வசித்து வந்தார். கடந்த 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி சுப்புலட்சுமி கழிவறைக்கு சென்று திரும்பிய போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று அதிகாலை மூளைச்சாவடைந்தது உயிரிழந்தார். மூளைச்சாவடைந்த மூதாட்டியின் உடல், உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். மூதாட்டியின் உடல் உறுப்புகளை சேலம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பெற்றுக் கொண்டனர். அவரது சொந்த ஊரான பள்ளிப்பட்டிக்கு உடல் கொண்டு வரப்பட்டது. ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் தாசில்தார் சீனிவாசன், வி.ஏ.ஓ., சுதா, அரசு அலுவலர்கள் மூளைச்சாவடைந்த மூதாட்டி சுப்புலட்சுமியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின் மூதாட்டியின் மகன் அருள் வேங்கடம், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Tags:    

Similar News