ஆட்டோ மோதி முதியவர் பலி!
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் காயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-27 15:41 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் மனோகர் (70). இவர் கடந்த 20ஆம் தேதி காய்கறி மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாளை., ரோடு நீதிமன்றம் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு ஆட்டோ இவரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மனோகர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.