கிரேன் மோதி முதியவர் பலி !

சிவகாசி அருகே கிரேன் மோதி முதியவர் பலி.போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-18 11:53 GMT

வழக்கு பதிவு

சிவகாசி அருகே கிரேன் மோதி முதியவர் பலி- விருதுநகர் மாவட்டம், சிவகாசி தென்றல் நகரை சேர்ந்தவ சித்திரைஜோதி (75). இவர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்து வந்து கடந்த 20 ஆண்டுகளாக சிவகாசி பகுதியில் சுற்றி திரிந்து வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று சிவகாசி சிறுகுளம் பகுதியில் நடந்து வந்த போது அந்த வழியாக வந்த கிரேன் சித்திரைஜோதியின் மீது மோதியது.இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News