தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மூதாட்டி கைது

ஈசநத்தத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-08 14:19 GMT

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, ஈசநத்தம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக, காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 6 மணி அளவில், ஈசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, ஈசநத்தம் பஸ் ஸ்டாப் அருகே, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்களை விற்பனை செய்த, ஈசனத்தம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா வயது 65 என்ற மூதாட்டியை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News