மினி லாரி மோதி மூதாட்டி பலி

மினி லாரி மோதி மூதாட்டி பலி. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-25 08:59 GMT

காவல்துறை விசாரணை


திருக்கோவிலுாரில் போலீஸ் மினி லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தார். கடலுார், ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றுபவர் குமரேசன், 36. நேற்று மதியம் 12:30 மணியளவில் திருவண்ணாமலை பாதுகாப்பு பணியை முடித்துக் கொண்டு, ஈச்சர் லாரியில், சாலை தடுப்புகளை ஏற்றுக் கொண்டு கடலுார் சென்று கொண்டிருந்தார். திருக்கோவிலுார், ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக் கொண்டு லாரியை திருப்பும்போது சாலையோரம் சென்ற தனகனங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தாயி, 75,என்பவர் மீது மோதியது. அதே இடத்தில் அவர், உயிரிழந்தார். விபத்து குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News