ஸ்கூட்டி மீது லாரி மோதி மூதாட்டி பலி

மாம்பாக்கத்தில் ஸ்கூட்டி மீது லாரி மோதிய விபத்தில் பின்னல் அமர்ந்து சென்ற மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-02-05 02:52 GMT

பைல் படம் 

திருப்போரூர் அடுத்த சோணலுார் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ரோஸ், 70. இவர், நேற்று மாலை 5: 00 மணிக்கு, உறவினரின் ஸ்கூட்டியில், பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது, கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையில், மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாலையை கடந்த போது, கேளம்பாக்கத்தை நோக்கி சென்ற சிமென்ட் கலவை லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அங்கு வந்த போலீசார், இறந்த மூதாட்டி ரோஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News