குட்கா வழக்கில் ஒருவர் கைது

திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையத்தில் பெட்டி கடையில் அத்துமீறி குட்கா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-28 06:05 GMT

திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையத்தில் பெட்டி கடையில் அத்துமீறி குட்கா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

பெட்டி கடையில் குட்கா விற்பனை செய்த கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்வராயன் மகன் முருகன், 45; இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். குட்கா உள்ளிட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் சோதனையிட்டனர். ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.


Tags:    

Similar News