பைக்கில் இருந்து விழுந்தவர் பலி !
கண்டாச்சிபுரம் அருகே பைக் விபத்தில் ஒருவர் பலியானார்.போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-16 06:00 GMT
பலி
கண்டாச்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வஜ்ரவேல், 42; முகையூர் கால்நடை மருத்துவமனையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து கண்டாச்சிபுரத்திற்கு தனது 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில் வந்து கொண்டிருந்தார்.கண்டாச்சிபுரம் வந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, பைக் சாலையில் வழுக்கி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் படுகாயமடைந்த வஜ்ரவேல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வஜ்ரவேல் ஹெல்மெட் அணிந்திருந்தும், அதனை முறையாக லாக் செய்யாததால், விபத்து நடந்தபோது, ஹெல்மெட் தனியாக கழன்றதால் தலையில் படுகாயமடைந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி சசிகலா, 39; அளித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.