அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை

புளியங்குடியில் அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் பலி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-12 05:23 GMT
 அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் பலி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி கந்தசாமி தெருவே சேர்ந்த சித்திரகனி மகன் முருகேசன் இவர் புளியங்குடி சங்கரன்கோவில் சாலையில் அமராவதி பள்ளி அருகே நடை பயிற்சியின் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி கொண்டு நிற்காமல் சென்று விட்டது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News